Friday, March 13, 2009

போன பின்

இனியெப்போதும் வரப்போவதில்லையேன்று
விளங்கவுமில்லை
அவள் சொல்லவுமில்லை.
இந்நேரம் நெடுந்தூரம் போயிருப்பாள்
அதே மாதிரி வேறு வேறு புன்னகைகளோடு.
தேடிக் கொண்டிருக்கிறேன்
அதே உலகின் வேறு வேறு திசைகளில்..

Friday, March 6, 2009

மறு நாளில்

பிரியங்களின் பொய்யும்
அவரவர் நியாயங்களும்
மோதிக்கொண்ட பின்னிரவில்
தலையணையும் சேர்ந்தே
கருகிப் போனது.